இந்தப் பிரபஞ்சத்தில் வயலின் என்ற மேல் நாட்டு இசைக்கருவியை இந்த அளவுக்கு விதவிதமாக,கலர்கலராக, பலவித இசைக் கலவைகளில்,விதவிதமான நாதங்களில்,ராகங்களில்,வேறு இசைக்கருவிகளையும் சேர்த்து பாடலுக்கிடையே அழகுப்படுத்திக் கொடுத்தவர் மேஸ்ட்ரோ இளையராஜா மட்டும்தான் இருக்கும்.
கொஞ்சம் யோசித்தால் Violin is maestro"s delightஓ என்று படுகிறது.இது வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்கு ரொம்ப தோதான கருவி. இசைஞானியும் வெஸ்டர்ன் கிளாசிகல் அபிமானி. இவருடைய இசையிலும் மேற்கத்திய நாதங்கள் விரவிக் கிடக்கும்.
சாஸ்தீரிய சங்கீதத்தில் இல்லாத சுதந்திரம் திரை இசை வயலினுக்கு நிறைய உண்டு.இளையராஜா புகுந்து விளையாடி இருக்கிறார்.இதை தனியாகவும் இசைக்கலாம். கோராஸ்ஸாகவும் இசைக்கலாம். இதோடு தொடர்புடைய செல்லோ, வயோலாவும் வயலின் குடும்பத்தைச் சேர்ந்துதான்.
இதன் நாதம் இசைக்கோர்ப்புக்கு ஒத்து வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இது கறிவேப்பலை மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் தூவலாம்.
மேல் நாட்டு இசை ரசிகர்கள் யாராவது கிழே கொடுத்துள்ள வயலின் இசைத் துண்டுகள் சிலவற்றைக் கேட்டால் தமிழ் இசைத்திரைப்பாடலகள் இடையே இசைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்பவே மாட்டார்கள்.
படம் பின்னணியிலும் நிறைய இதை இசைக்கிறார். ஏக்கம்,தனிமை,சோகம்,துக்கம் மற்றும் இனம் புரியாத ஆழ் மன உணர்ச்சிகளை கிளறுகிறது. இதயம் படத்தில் மின்னல் கீற்றாக வயலின் தீற்றல்கள் நிறைய வரும. முரளியின் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும்.
எம் எஸ்வி அவர்கள் புதிய பறவை என்ற படத்தில் “எங்கே நிம்மதி” என்ற பாட்டிற்கு 100 வயலின்கள் பயன்படுத்தி பாட்டிற்கு ஒரு களேபர உணர்ச்சிகரத்தைக் கொடுத்திருப்பார்.
பின் வரும் இசைக் கோர்ப்புகளில் வழக்கமான இனிமை,புத்திசாலித்தனம்,Professional touch,முக்கியமாக ...மிக மிக முக்கியமாக “ஆத்மா” இருக்கிறது.
அடுத்து சில (பல?)இசைக்கோர்ப்புகளில் finishing touchஐ கவனியுங்கள்!
நான் அடிக்கடி சொல்வது,இவரின் இசை நாத இணைப்புகளில் “ஒட்டு” மற்றும் “அசட்டுத்தனம்” இல்லாமல் இருக்கும்.
ஒரு கட்டத்தில் வயலின் நாதத்தை சிந்தசைசர் என்ற எலெக்ட்ரானிக் கருவியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.காலத்தின் கோலம்.
மொத்தத்தில் வயலின் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டது.
பின் வரும் ஆடியோக்களில் இசைத்துளிகள் மட்டும்தான்.முழுப்பாட்டு கிடையாது. வயலின் நாதத்திற்க்கு முன்னே அல்லது பின்னே வேறு இசைக்கருவிகளின் நாதமும் வரும். காரணம் ஒரு முழுமைக்காகதான்.
எல்லாமே ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் வைக்கப்படுகிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.
இனி இசை ஜகதலப்பிரதாபன் இளையராஜாவின் mindblowing and enchanting violins.....
அன்னக்கிளி (1975) -அன்னக்கிளி உன்ன தேடுது
(முதல் படம்.வித்தியாசமான தீற்றல்கள்.ராஜாவின் இயல்பான 1.துரிதகதியில் நாதப்பின்னல் 2.பல வித இசைக்கருவி3.மேற்கத்திய இசை கலவை 4.நாதங்களை ரிபீட் செய்யாமை.அப்போதைய டிரெண்டை காப்பி அடிக்காமல் செய்த வயலின் நாதங்கள் அருமை.கிராமிய மணம் மாறாமல் மேற்கத்திய சாயல் வாசிக்கப்படுகிறது)
Violin-1-Annakiliunna.mp3
காதல் ஓவியம்(1982)-பூவில் வந்து கூடும்
(இனிமையான தனி வயலின்)
Violin-1-Poovilvandu.mp3
பகல் நிலவு(1985)-பூமாலையே தோள் சேரவா
(துள்ளல் கோரஸ் வயலின். 0.14 பிறகு வயலினுக்குள் நடக்கும் உரையாடல் இனிமை.நம்முடனும் உரையாடுகிறது)
Violin-1-Poomaaliye.mp3
அஜந்தா(2007) -யாருக்கு யார் என்று
( இது தமிழ்ப் பட இசையா? 0.19 பிறகு full style)
Violin-1-Ajantha.mp3
டிக் டிக் டிக் (1981)- பூ மலர்ந்திட
Violin-1-poomalarinth.mp3
கர்ஜனை(1981) - என்ன சுகமான உலகம்
(இதில் துடிப்புடன் வரும் நாதம் 0.16ல் மெதுவாக மாறி வித்தியாசமாக அமுங்குகிறது.0.34-0.45ல் வயலினுக்கு கிடார் தாளமாக இசைக்கப்படுகிறது.
அட்டகாசம்..!)
Violin-1- Ennasugamaana.mp3
புவனா ஒரு கேள்வி குறி(1977)-விழியிலே மலர்ந்தது
(அப்போது பிரமிக்க வைத்த இசைக் கோர்வைகள். 1980ல்தான் தீவிரமாக கவனிக்க முடிந்தது)
Violin-1-Vizhiyilae.mp3
அலைகள் ஓய்வதில்லை(1981)-புத்தம் புது காலை
(எனக்கு மிகவும் பிடித்த இசைத் துண்டு.மிகவும் ரம்யமான வயலின்..!வயலினில் புத்தம் புது காலையை காட்டுகிறாரோ?ஆச்சரியப்படுத்துகிறார்)
Violin-1-PuthamPuthu.mp3
சூரக்கோட்டை சிங்கக் குட்டி(1983)-காளிதாசன் கண்ணதாசன்
Violin-1-Kalidasan.mp3
கிழக்கே போகும் ரயில்(1978)-பூவரசம்பூ பூத்தாச்சு
(வயலின் நாதத்தோடு பின்னால் ஒரு புல்லாங்குழல் அழகுப்படுத்துகிறது.பாஞ்சாலிக்காக தலை சுற்றும் வயலின்)
Violin-1-Poovarasum.mp3
பூந்தோட்ட காவல்காரன்(1988)-சிந்திய வெண்மனி
(உணர்ச்சிகரமான வயலின்.பாட்டின் ஹோம்லி மூடைச் சொல்கிறது )
Violin-1-SinthiyaVenmani-PKaval.mp3
ஜானி(1980) காற்றில் எந்தன் கீதம்
(கோரஸ் வயலின்கள் உண்டாக்கும் உணர்ச்சிகள் புதுசு.பிரமிக்க வைக்கிறது.இது ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இடையே வருகிறது என்று வெளியாட்கள் நம்புவார்களா?உள் ஆட்களே நம்ப மாட்டார்கள்)
Violin-1-Katrilenthen.mp3
அவள் அப்படித்தான்(1978) வாழ்க்கை ஓடம் செல்ல
Violin-1-Vazhkaioodam.mp3
மெட்டி(1982) மெட்டி ஒலி
Violin-1-MettiOli.mp3
பன்னீர் புஷ்பங்கள்(1981)-ஆனந்த ராகம் கேட்கும்
(இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.கிளாசிகல்(சிம்மேந்திர மத்யமம் ராகம்) வயலின் பிரவாகம் எடுத்து குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது.0.26 ஆரம்பிக்கும் வயலினை உற்றுக் கேளுங்கள் ஒரு வித வலியுடன் உரையாடுகிறது.குறுக்கே ஷெனாய்யும் வலியுடன்.கவுண்டர் பாயிண்ட்.Musical riot..! Stunning..!)
Violin-1-Anandaraagam.mp3
எங்க ஊரு பாட்டுக்காரன்(1987) மதுர மாரிக்கொழுந்து
(பெண்கள் ஹ்ம்மிங்கிறகு எப்படி பதிலலிக்கிறது பாருங்கள்.இரண்டு ஹ்ம்மிங்கிற்கும் இரண்டுவிதமான வயலின் தீற்றல்கள்)
Violin-1-Madhuramari.mp3
உறவாடும் நெஞ்சம்(1976)- ஒரு நாள் உன்னோடு
(finishing touchஐ கவனியுங்கள்.அட்டகாசம்)
Violin-1-OruNaalUnnodl.mp3
முந்தானை முடிச்சு(1983)-அந்தி வரும் நேரம்
(இதிலும் வித்தியாசமான நாதங்கள்)
Violin-1-Andhivarum.mp3
மண் வாசனை(1985)-பொத்தி வச்ச மல்லிகைமொட்டு
Violin-1-PotthiVech.mp3
நிழல்கள்(1980)-இது ஒரு பொன்மாலைப் பொழுது
(ஞானியின் செல்லமான வெஸ்டர்ன் கிளாசிகல் தீற்றல்கள்.0.51 முடிகிறது என்று முடிவு செய்தால் 0.52-0.53 அழகான finishing touch கொடுத்து முடிக்கிறார்)
Violin-1-Ithuoruponfinal.mp3
தென்றலே என்னைத் தொடு(1985)-தென்றல் வந்து என்னை
Violin-1-ThendlVanEnnaiThodum.mp3
ஆராதனை(1981)- இளம்பனி துளிர்விடும் நேரம்
Violin-1-Ilampanithuli.mp3
பூந்தளிர்(1979)-ஞான் ஞான் பாடனும்
(ஓற்றை வயலின் அதன் சம்பிரதாயமான நாதத்தில்.அற்புதமாக அமைக்கப்பட்ட 0.15-0.19.புல்லாங்குழலுடன் உரையாடல்.)
Violin-1-Jnan jnan.mp3
அவதாரம்(1995)-தென்றல் வந்து தீண்டும்போது
(உள்ளே ஊடுபாவாக போகும் வயலின் ஆத்மாவை தீண்டுகிறது)
Violin-1-Avatharam-Then.mp3
மெட்டி(1982)-சந்தக்கவிகள் பாடிடும்
(00.00-0.09/0.13-0.20/0.27-0.29/0.47-.053 விதவிதமான soulful வயலின்கள்(செல்லோ?ஆரபி ராகத்தில் கிளாசிக்கலாக ஆரம்பித்து ........பாட்டை எப்படியெல்லாம் அழகுப்படுத்துகிறது)
Violin-1-Sandakavigal.mp3
வள்ளி(1993)-என்னுள்ளே என்னுள்ளே
Violin-1-EnnulleEnnul.mp3
அரங்கேற்றவேளை(1990)- ஆகாய வெண்ணிலாவே
(கானடா ராகத்தில் லீடில் ஒரு சுணுங்கியபடி தனி வயலினும் அதை தொடரும் கோரஸ்(?) வயலினும் 0.06ல் சேரும் தபலாவும் 0.20ல் மாறும் வயலின் நாதமும் அதன் உரையாடலும். அட்டகாசம்.Highly Divine!Hats of Maestro!.தபலாவை ஏன் 0.06ல் சேர்க்கிறார்?)
Violin-1-Aagayavennilave.mp3
நினைவெல்லாம் நித்யா(1982)-பனிவிழும் மலர்வனம்
(வித்தியாசமான கலவை/மணம்/உரையாடல்)
Violin-1-PaniVizhMal.mp3
.படிக்க: பகுதி-2
http://raviaditya.blogspot.com/2011/01/king-of-enchanting-violins-2.html



No comments:
Post a Comment